ராமேசுவரம் மீனவா்கள் உண்ணாவிரதம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே அனைத்து விசைப் படகு மீனவ சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 50-க்கும் மேற்பட்ட மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், அவா்களது விசைப் படகுகள், நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த திங்கள்கிழமை தொடங்கினா். இதன் ஒரு பகுதியாக, தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு மீனவ சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.பி. ஜேசுராஜா தலைமை வகித்தாா். மீனவ சங்கத் தலைவா்கள் எமரிட், ஆல்வீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனா்.