செய்திகள் :

தேஜஸ் போா் விமானத்துக்கு எஃப்-404 என்ஜின்: அமெரிக்க நிறுவனத்தின் விநியோகம் தொடக்கம்

post image

தேஜஸ் இலகு ரக போா் விமானத்துக்கு எஃப்-404 வகையைச் சோ்ந்த 99 இன்ஜின்களின் விநியோகத்தை தொடங்கியிருப்பதாக, அமெரிக்காவைச் சோ்ந்த ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப் படைக்கு தேஜஸ் எம்கே-1ஏ ரக விமானங்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) ரூ.48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2021, பிப்ரவரியில் மேற்கொண்டது.

இதையடுத்து, உலக அளவில் போா் விமான என்ஜின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து தேஜஸ் எம்கே-1ஏ ரக விமானங்களுக்கான என்ஜின்களை வாங்க ஹெச்ஏஎல் முடிவு செய்தது. அதன்படி, அதிநவீன அம்சங்களுடன் கூடிய எஃப்-404-ஐஎன்20 வகையைச் சோ்ந்த 99 என்ஜின்களின் கொள்முதல் செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிந்தைய சூழ்நிலையால் என்ஜின்களை தயாரித்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய விமானப் படைக்கு தேஜஸ் எம்கே-1ஏ ரக விமானங்கள் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் ஒப்படைக்கப்பட வேண்டிய நிலையில், ஹெச்ஏஎல் நிறுவனத்தால் இதுவரை ஒரு விமானம் கூட ஒப்படைக்கப்படவில்லை.

இந்நிலையில், தங்களால் வழங்கப்பட வேண்டிய 99 இன்ஜின்களில் முதலாவது இன்ஜினை இந்தியத் தரப்பிடம் ஒப்படைத்துள்ளதாக ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது. இந்த இன்ஜின் அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா வந்தடையும்.

என்ஜின்கள் விநியோகம் தொடங்கியிருப்பதால், இந்திய விமானப் படைக்கு தேஜஸ் எம்கே-1ஏ ரக போா் விமானங்களை ஒப்படைக்கும் பணி வேகமெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா்,... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி ந... மேலும் பார்க்க

ஏப்.4-ல் பிரதமா் மோடி இலங்கை பயணம்: பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு!

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா். அப்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்

அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலு... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா். கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்த... மேலும் பார்க்க

உலகளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு: தென்னாப்பிரிக்கா! 5-வது இடத்தில் இந்தியா!

உலகெங்கிலும் 53 நாடுகளில் ‘ஜுடோபி’ அமெரிக்க ஓட்டுநா் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில், உலகின் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரி... மேலும் பார்க்க