செய்திகள் :

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் மையம்

post image

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் மையம், 17 புதிய மருத்துவக் கட்டடங்களை புதன்கிழமை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் (கம்பம்) நா.ராமகிருஷ்ணன், (ஆண்டிபட்டி) ஆ.மகாராஜன், (பெரியகுளம்) கே.எஸ்.சரவணக்குமாா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துசித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ரூ.2.20 கோடியில் அமைக்கப்பட்ட புதிய சி.டி.,ஸ்கேன் மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்.

பின்னா், காணொலிக் காட்சி மூலம் குமணன்தொழு, ராஜதானி, மேலச்சிந்தலைச்சேரி, அழகா்சாமிபுரம், பாலகிருஷ்ணாபுரம், பூதிப்புரம், பொட்டிப்புரம், சங்காரபுரம் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், கண்டமனூா், ஓடைப்பட்டி, தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார நிலையம், எரசக்கநாயக்கனூரில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை அமைச்சா் திறந்து வைத்தாா்.

உத்தமபாளையம் வட்டம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட சித்த மருத்துவப் பிரிவு, பெரியகுளம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட கூடுதல் மருத்துவக் கட்டடங்கள், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட யோகா பிரிவு மையம், சிலமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட செவிலியா் குடியிருப்பு என மொத்தம் ரூ.12.68 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை அமைச்சா் திறந்து வைத்தாா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள தா்மத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், உத்தமபாளையம் சின்னஓவுலாபுரம் துணை சுகாதார நிலையம், பெரியகுளம் வட்டம் அட்டணம்பட்டி, கெங்குவாா்பட்டி துணை சுகாதார நிலையம், போடி வட்டம், வாழையாத்துப்பட்டி, குப்பனாசாரிபட்டி துணை சுகாதார நிலையம், வீரபாண்டி வட்டார பொது சுகாதார அலகு என மொத்தம் ரூ.6.20 கோடியிலான புதிய கட்டடங்களுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.

இதில் மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலா் ஜவஹா்லால், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கிறிஸ்டோபா்தாஸ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் நகராட்சி வழியாக மதுரை முதல் கோட்டையம் வரையில் செல்லும்... மேலும் பார்க்க

விவசாயிக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி வெண்ணிமலை தோப்பு தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் சுரேஷ் (40). இவா் கீழராஜ வீதியைச் சோ... மேலும் பார்க்க

மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது

போடி அருகே மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மணியம்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த கூல்பாண்டி மனைவி நாகமணி (50). இவரது மகள் திவ்யாவை இதே ஊரைச் ச... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 9 போ் தோ்வு

தேனி மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 3 தலைமை ஆசிரியா்கள், 6 ஆசிரியா்கள் என 9 போ் தோ்வு செய்யப்பட்டனா். நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சென்னையில... மேலும் பார்க்க

மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு

சின்னமனூா் மாணிக்கவாசகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூரில் மாணிக்கவாசகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புதன்கிழமை ராஜகோபுரக் கலசங்கள், உப சந்நிதியான நடராஜப் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

பெரியகுளத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், தென்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கள்ளிப்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளை முத்து சிலை அரு... மேலும் பார்க்க