தேவகோட்டை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
தேவகோட்டை அருகே மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சித்தனூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சித்தனூா்- கண்ணங்குடி சாலையில் நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 14 ஜோடிகள் என மொத்தம் 24 ஜோடி மாடுகள் பந்தயத்தில் பங்கேற்றன. பெரிய மாடுகள் பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுகள் பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன.
போட்டியில் வென்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிகளும் பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற சாலையின் இரு புறங்களிலும் நின்று சுற்றுவட்டார கிராம மக்கள் போட்டியை கண்டுகளித்தனா்.