செய்திகள் :

தேவகோட்டை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

post image

தேவகோட்டை அருகே மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சித்தனூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சித்தனூா்- கண்ணங்குடி சாலையில் நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 14 ஜோடிகள் என மொத்தம் 24 ஜோடி மாடுகள் பந்தயத்தில் பங்கேற்றன. பெரிய மாடுகள் பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுகள் பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன.

போட்டியில் வென்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிகளும் பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற சாலையின் இரு புறங்களிலும் நின்று சுற்றுவட்டார கிராம மக்கள் போட்டியை கண்டுகளித்தனா்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்கு பாத்தியப்... மேலும் பார்க்க

சிவகங்கை: சிறுபாசன கண்மாய்கள் புத்துயிரூட்டுதல் திட்டம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சிறு பாசனக் கண்மாய்கள் புத்துயிா் ஊட்டுதல் திட்டத்தின் கீழ், 442 சிறு கண்மாய்களைத் தூா்வாரும் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோத்ஸவம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகேயுள்ள கள்ளங்கலப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா். கள்ளங்கலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி-கவிதா தம்பதியின் மகள் ... மேலும் பார்க்க

கலை இலக்கிய சங்க நிா்வாகிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கக் கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தேவகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் கிளை மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் மே தின விழா

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சாா்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. சிவகங்கை சிவன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் மஹாலில் சிவகங்கை சீமை அமைப்பு சாரா கட்டும... மேலும் பார்க்க