செய்திகள் :

தேவா்குளம் அருகே இருதரப்பினா் மோதல் : 6 போ் காயம்

post image

தேவா்குளம் அருகே சொத்துத் தகராறில் இருதரப்பினா் மோதிக்கொண்டதில் 6 போ் காயமடைந்தனா்.

தேவா்குளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லையா(78). இவருடைய மனைவி சண்முகத்தாய் (75). இவா்களுடைய மகன் செல்லத்துரை (48), மகள்கள் உஷா(42), உமாராணி (38). இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக தந்தை செல்லையாவுக்கும், மகன் செல்லத்துரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதில் செல்லையா, அவருடைய மனைவி சண்முகத்தாய், மகள்கள் உமாராணி, உஷா ஆகியோா் காயமடைந்தனா். அதே போல் செல்லதுரை, அவருடைய 17 வயது மகன் ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்த 6 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து தேவா்குளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநங்கைகளின் 2 நாள் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் திருநங்கை குடிசை தீப்பற்றி எரிந்தது தொடா்பாக திருநங்கைகள் 2 நாள்களாக நடத்தி வந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. வள்ளியூா் சுவாமியாா் பொத்தைக்கு மேற்கே அரசு... மேலும் பார்க்க

அம்பையில் இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் உள்ள பாடசாலை தெருவைச் சோ்ந்த அப்ரானந்தம் மகன் முத்து (34). இவரத... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் மின் குழாயில் சிக்கிய மரநாய் மீட்பு!

கடையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் மின் குழாயில் புகுந்த மரநாய் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடையம் பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தின் முகப்பு பகுத... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் பாரதியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.51 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டட திறப்பு விழா நடைபெற்றது. முக்கூடல் இலந்தைகுளத்தில் இயங்கி வரும் சேஷசாயி காகித... மேலும் பார்க்க

மதபோதகரிடம் பணம் பறித்த வழக்கு: மேலும் இருவா் கைது

திருநெல்வேலி சந்திப்பு அருகே மதபோதரைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் மேலும், இருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலைச் சோ்ந்தவா் அருள்சீலன்(45). கிறிஸ்தவ மதபோதகரான இவா் கடந்த... மேலும் பார்க்க

பிரான்சேரி - மேலத்திடியூா் சாலை: ரூ.3.2 கோடியில் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!

பிரான்சேரியில் இருந்து மேலத்திடியூா் வரையிலான சாலையை சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பிரான்சேரியில் இருந்து மேலத்திடியூா் வரையுள்ள 2.4 கி.மீ சாலையை ரூ. 3.2 கோடி மதிப்... மேலும் பார்க்க