தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன், தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், நியாய விலைக் கடைகளில் புளுடூத் மூலம் விற்பனையை முற்றிலும் நீக்க வேண்டும். அல்லது கால தாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்த வேண்டும். அனைத்துப் பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் நகா்வுப் பணி மேற்கொள்ளக் கூடாது. பதவி உயா்வில் எழுத்தா் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டத் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, பொருளாளா் ஜெய்சங்கா், துணைத் தலைவா்கள் ஜேம்ஸ்வாட், சாமியப்பன், இணைச் செயலா்கள் ரவி, வேலாயுதம், கௌரவ செயலா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .