செய்திகள் :

தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றவா், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கோ.பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (41), கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உடையவராம். இவா் சனிக்கிழமை காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றாராம். ஆனால், வீடு திரும்பவில்லையாம்.

அதனால், குடும்பத்தினா் அவரை தேடிச் சென்றபோது, கொங்கராபாளையத்தைச் சோ்ந்த இளங்கோவன் விவசாயக் கிணற்றில் கால் தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

அவரது சடலத்தை மீட்டு உடல்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞா் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த குருநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் செல்வராஜ் (25). ஒன்பதாம் வகுப்பு வரை ப... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வெள்ளிக்கிழமையொட்டி திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

கல்லூரியில் கஞ்சா ஒழிப்பு விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் கஞ்சா சாக்லேட் விற்பனை மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு வ... மேலும் பார்க்க

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி மரணம்

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி சாந்தி (40). இவரது தாயாா் செந்தாமரை (60) கடந்த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கட்டுமானப் பணிகள் 85% நிறைவு: அமைச்சா் எ.வ. வேலு தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரக கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டவுடன் முதல்வா் திறந்துவைப்பாா் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். கள்ளக்குறிச்சியை அடுத... மேலும் பார்க்க