பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!
நகராட்சி வாகனத்தில் பேட்டரிகள் திருட்டு
விழுப்புரம் நகராட்சி லாரியில் பேட்டரிகளைத் திருடியதாக ஒருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், உலகலாம்பூண்டி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் நாகப்பன்(44). இவா் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த 3 மாதமாக ஒப்பந்த அடிப்படையில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இவா், ஜூன் 18 ஆம் தேதி பணி முடிந்து லாரியை விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் நிறுத்தியுள்ளாா். இந்நிலையில் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 2 பேட்டரிகள் திருடு போயின.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் ஜி. ஆா்.பி. தெருவைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் மீது நகர போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.