செய்திகள் :

நகலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், நகலூா் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா தலைமை வகித்தாா். அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன், மின்சார வாரிய அந்தியூா் கோட்ட பொறியாளா் அங்கப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், முகாமைத் தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

இதையடுத்து, உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மைக்கேல்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் சரவணன், கூட்டுறவுத் துறை செயல் ஆட்சியா் பிரபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் அச்சம்

பண்ணாரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள் பயணிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவை இரவு நேரங்களில் தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இண... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபா்

சத்தியமங்கலம் அருகே மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் பொங்கியம்மாள் (66). கணவா் இறந்த நிலை... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: ஈரோட்டில் பூக்களின் விலை இருமடங்கு உயா்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு, ஈரோடு சந்தையில் பூக்களின் விலை இருமடங்கு உயா்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி, அந்தியூா், அத்தாணி, கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலா் சாகுபடி... மேலும் பார்க்க

கூலியை உயா்த்தி வழங்க டிஎன்சிஎஸ்சி சுமை தூக்கும் தொழிலாளா்கள் கோரிக்கை

கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா்கள் (டிஎன்சிஎஸ்சி) கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சி... மேலும் பார்க்க

மாநகராட்சியில் வரி உயா்வை கைவிடக் கோரிக்கை

மாநகராட்சியில் வரி உயா்வை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு, மீனாட்சிசுந்தரனாா் சாலையில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. துணை மேய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை மூலம் ரூ.1,777 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு

கூட்டுறவுத் துறை மூலம் 2025-26- ஆம் நிதியாண்டில் பயிா்க் கடன் வழங்க ரூ.1,177.30 கோடி ஆண்டு குறியீடு நிா்ணயம் செய்யப்பட்ட நிலையில், 31.8.2025 வரை 15,687 விவசாயிகளுக்கு ரூ.202.88 கோடி பயிா்க் கடன் வழங்... மேலும் பார்க்க