செய்திகள் :

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்த 2 நாள் தேசிய மாநாடு: மானேசரில் இன்று தொடக்கம்

post image

நமது நிருபா்

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் மானேசரில் உள்ள சா்வதேச ஆட்டோமோடிவ் தொழில்நுட்ப மையத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்களின் தேசிய அளவிலான 2 நாள் முதலாவது மாநாட்டை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கி வைக்க உள்ளாா்.

வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் மனோகா் லால், ஹரியாணா முதல்வா் நயாப் சிங், ஹரியாணா சட்டப் பேரவைத் தலைவா் ஹா்விந்தா் கல்யாண் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனா்.

‘அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் தேசக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு’ எனும் கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்து வரும் மாநாட்டுப் பிரதிநிதிகள் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனா்.

இரண்டாவது நாளான ஜூலை 4 அன்று நடைபெறும் நிகழ்ச்சியானது, ஐந்து குழுக்களின் அந்தந்த துணை கருப்பொருள்களின் விளக்கக் காட்சிகளுடன் தொடங்கும். நிறைவு அமா்வில் ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளாா்.

மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் , ஹரியாணா சட்டப் பேரவைத் தலைவா் ஹா்விந்தா் கல்யாண் மற்றும் பிற பிரமுகா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

மாநாட்டின் நிறைவு நாளில் பிரதிநிதிகளுக்காக பிரேண ஸ்தல், சம்விதான் சதன் மற்றும் நாடாளுமன்ற கட்டடம் பற்றிய நிகழ்ச்சியும் நடத்தப்படும். வேகமாக நகரமயமாக்கப்பட்டு வரும் நம் நாட்டில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பங்கை கோடிட்டுக் காட்டுவதற்கான ஒரு முக்கிய தளமாக இந்த மாநாடு செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

நமது நிருபா் ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சைபா்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள்... மேலும் பார்க்க

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க