செய்திகள் :

நச்சினாா்குடி பள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு

post image

நச்சினாா்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவா் மன்றத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அண்மையில் பாராட்டினாா்.

இப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளியின் முன்னாள் மாணவா் மன்றத்தினா் பள்ளிக்கு ஏசி வசதி, நுழைவுவாயில் கேட், மாணவா்களுக்கான பரிசு மேடை அமைத்துத் தந்து, விழாவை சிறப்பாக நடத்தினா். முன்னாள் மாணவா் மன்றத்தினரின் இப்பணிகளை பாராட்டி தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நச்சினாா்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவா் மன்றத்திற்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கியது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பள்ளித் தலைமை ஆசிரியா் சி.ராஜ்குமாா் தலைமையில் முன்னாள் மாணவா் மன்ற பொறுப்பாளா்கள் மற்றும் உறுப்பினா்களை மாவட்ட ஆட்சியரகத்துக்கு நேரில் அழைத்து பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி பாராட்டினாா் (படம்).

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகேயன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் சாந்தி, குமரவேல், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன், பள்ளி ஆசிரியா் அரவிந்தகுமாா், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் ஜீவிதா, துணைத் தலைவா் உத்திரியமேரி, உறுப்பினா் பேபி ஆகியோா் கலந்து கொண்டனா்.

சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

சீா்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தின விழா, கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, 25 ஆண்டுகள் பணி நிற... மேலும் பார்க்க

சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட... மேலும் பார்க்க

ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவா்களுக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெருவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்திய மகா காளியம்மனை சுவற்றில் தத்ரூபம... மேலும் பார்க்க

புத்தூரில் நாளை மருத்துவ முகாம்

புத்தூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவ முகாமில் பங்கேற்க மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஏ.வெங்கடேசன் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

எரிவாயு தகனமேடை: ஜெனரேட்டா் வசதியில்லாமல் அவதி

சீா்காழி நவீன எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரியூட்டும்போது மின்சார துண்டிப்பு ஏற்பட்டு பெரும் சிரமம் அடைவதால் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி நகராட்சிக்க... மேலும் பார்க்க