செய்திகள் :

நடிகை புகார் எதிரொலி: கேரள காங். எம்எல்ஏ கட்சிப் பதவியிலிருந்து ராஜிநாமா

post image

காங்கிரஸ் எம்எல்ஏயும் கேரள மாநில இளைஞரணித் தலைவருமான ராகுல் மாங் கூட்டத்தில் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக திரைப்பட நடிகை ரினி ஆன் ஜார்ஜ் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவர் தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்தார்.

கேரளத்தில் ஓர் இளம் அரசியல் தலைவர் தனக்கு ஆட்சேபகரமான (ஆபாச) குறுஞ்செய்திளை அனுப்பியதாகவும் தன்னை ஹோட்டலுக்கு வருமாறு அழைத்ததாகவும் நடிகை ரினி ஆன் ஜார்ஜ் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். அவரை எச்சரித்தபோதிலும் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், தனது செயலை அவர் நிறுத்தாவிடில் அவருடைய பெயரை வெளியிடுவேன் என்றும் ரினி ஆன் ஜார்ஜ் கூறினார்.

இந்நிலையில், பாலக்காடு தொகுதி எம்எல்ஏவும் கேரள மாநில இளைஞரணித் தலைவருமான ராகுல் மாங்கூட்டத்தில் பெயரைக் குறிப்பிட்டு, தனக்கும் அவர் இதுபோன்ற தொல்லை அளித்ததாக பெண்ணிய எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை முன்வைத்து பாஜகவும், கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டிஒய்எஃப்ஐ}யும் போராட்டங்களை நடத்தின. குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராகுல் மாங்கூட்டத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.

மாநில அரசியலில் இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளானது. இதையடுத்து, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலகுவதாக ராகுல் மாங்கூட்டத்தில் வியாழக்கிழமை அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினேன். அவர்கள் எனது ராஜிநாமாவைக் கோரவில்லை. எனினும் அற்ப விவகாரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் நேரத்தைச் செலவிடக் கூடாது என்பதற்காக எனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். புகார் கூறியுள்ள நடிகை எனது நண்பர். அவர் குற்றம்சாட்டியுள்ள நபர் நான் அல்ல. நான் சட்டத்துக்கோ அரசியல் சாசனத்துக்கோ எதிராக நடந்து கொள்ளவில்லை' என்றார்.

இந்த விவகாரம் குறித்து கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:

தீவிரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை காங்கிரஸ் கட்சி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரம் தற்போதுதான் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அரசியல் தலைவர்களுக்கு எதிராக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவது வழக்கம். உரிய வகையில் புகார் பதிவு செய்யப்படும்போதுதான் கட்சி நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது உட்கட்சி ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநி... மேலும் பார்க்க

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மா... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க