செய்திகள் :

நயன்தாரா திருமண ஆவணப் படத்தில் ‘சந்திரமுகி’ படக் காட்சிகளைப் பயன்படுத்த தடை கோரி மனு

post image

நடிகை நயன்தாரா திருமண ஆவணப் படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கில், ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏ.பி.இண்டா்நேஷ்னல் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகை நயன்தாராவின் திருமணம் மற்றும் அவா் ஏற்கெனவே நடித்த படங்களில் இடம்பெற்ற காட்சிகளைக் கொண்ட ஆவணப்படம் கடந்த 2024-ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

அந்த ஆவணப் படத்தில் ’சந்திரமுகி’ படத்தில் நயன்தாரா நடித்த காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்தப் படத்தின் பதிப்புரிமையைப் பெற்றுள்ள நாங்கள், அந்தக் காட்சிகளை நீக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் காட்சிகள் அகற்றப்படவில்லை.

எனவே ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் காட்சிகளை ஆவணப் படத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக ஆவணப் படத் தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக். 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பல... மேலும் பார்க்க

ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்

ஜொ்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தாா். தலைமைச் செயலகத்தில் நூலகப் பொறுப்பாளா்களிட... மேலும் பார்க்க

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு ஆளுநா் பாராட்டு

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த இரு ஆசிரியா்களை ஆளுநா் ஆா்.என்.ரவி, புதன்கிழமை அழைத்துப் பாராட்டினாா். நிகழாண்டு ஆசிரியா் தினத்தையொட்டி சென்னை மயிலாப்பூா் பி.எஸ்.சீனியா் செகண்டரி ப... மேலும் பார்க்க

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வா் பெருமிதம்

இசையமைப்பாளா் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகா்களுக்குமானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: ராஜாவைத் தாலாட்டும் த... மேலும் பார்க்க

இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: த... மேலும் பார்க்க

ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் சேகா்பாபு

ராமேசுவரம்- காசி கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேசுவரம் ர... மேலும் பார்க்க