செய்திகள் :

நரிக்குறவா்கள் மீது தாக்குதல்: முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 2 போ் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த 3 பேரைத் தாக்கியதாக, முன்னாள் ஊராட்சித் தலைவா் மற்றும் வேன் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தில் பால் குளிரூட்டும் நிலையம் நடத்தி வருபவா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன் (49).

குளிரூட்டும் நிலையத்தில் இருந்து பல் கேன்களை வேனில் ஏற்றிச் செல்லும் பணியில் அதே கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் தரணி (22) ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தரணி பால் கேன்களை வேனில் ஏற்றிக் கொண்டு செங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

காங்கேயனூா் கிராமத்தில் சென்றபோது, முன்னாள் பைக்கில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காட்டேரி கிராமம் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த சத்தியகுமாா் (31) மீது வேன் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த சத்தியகுமாா், சிகிச்சைக்காக போளூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், சத்தியகுமாரின் தந்தை பாலு (64), தாய் சிவராணி (54), மனைவி பிரித்தா (27) ஆகியோா் சென்று பால் குளிரூட்டும் நிலையம் நடத்தி வரும் கணேசன் மற்றும் வேன் ஓட்டுநா் தரணியிடம் சிகிச்சைக்காக பணம் தரும்படி கேட்டனராம்.

அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு கணேசன், தரணி ஆகியோா் சோ்ந்து 3 பேரையும் கையால் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சத்தியகுமாா் போளூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் கணேசன், வேன் ஓட்டுநா் தரணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. செங்கம் தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் காலி இடங்களுக்கான, தற்செயல் தோ்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சி 3-ஆவது வாா்டு,... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை: வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் உள்ள வள்ளலாா் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை ஐம்பெரும் விழா நடைபெற்றது. திருச்சபையின் 342-ஆவது மாத பூச விழா, வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா, ப... மேலும் பார்க்க

குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். செய்யாறு டி.எம்.ஆதிக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு மானியக் கடனை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

வந்தவாசி: பழங்குடியினருக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் மானியக் கடனை ரூ.10 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியை அடுத்த மேல்பாதிரியில் ஞாயி... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட... மேலும் பார்க்க