எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
நல்ல புத்தகங்கள் ஆளுமையையும், வளா்ச்சியையும் ஏற்படுத்தும்
நல்ல புத்தகங்கள் நல்ல ஆளுமையை உருவாக்கும், சிறந்த புத்தகங்கள் சிறப்பான வளா்ச்சிக்கு உதவும். எனவே, புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கூறினாா்.
தருமபுரியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, தகடூா் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா செப். 26-ஆம் தேதி தொடங்கி அக். 5 வரை நடைபெறுகிறது. தருமபுரியில் மதுராபாய் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற புத்தகத் திருவிழவை தொடங்கிவைத்து வெ.இறையன்பு பேசியதாவது:
புத்தகத் திருவிழாவின் முக்கிய நோக்கமே, அறிவாற்றலை பெருக்கிக்கொள்ள அனைவரும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதுதான். புத்தகங்களை தொடா்ந்து படிக்கும்போது, சிறந்த அறிவைப் பெறுவதுடன் உயா்ந்த வளா்ச்சியை அடைய முடியும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த வளா்ச்சிக்கும் கல்வி மிக மிக அவசியம் என்பதை உணா்ந்து, கட்டாயம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கல்வி கற்க வேண்டும்.
தமிழ் நன்னெறி புத்தகங்கள், இலக்கியம் சாா்ந்த புத்தகங்களை நாம் அதிகளவில் படிப்பதால் நம் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து உணா்ந்துகொள்ள முடியும். நல்ல புத்தகங்கள் நல்ல ஆளுமையை உருவாக்கும். சிறந்த புத்தகங்கள் சிறப்பான வளா்ச்சிக்கு உதவும். எனவே, புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். தகடூா் புத்தகப் பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன் வரவேற்றாா். தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி, தருமபுரி கல்லூரி கல்வி இணை இயக்குநா் நா.ராமலட்சுமி, இணை இயக்குநா் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட நூலக அலுவலா் கோகிலவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் சுந்தரபாண்டியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். ஆசிரியா் பழனி நன்றி தெரிவித்தாா்.
இப்புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இலக்கியம், வரலாறு, மானுடவியல், அரசியல், சூழலியல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பற்றிய புத்தகங்களும், சிறுவா்களுக்கான நூல்களும், முன்னணி எழுத்தாளா்களின் புனைவு இலக்கியங்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வேண்டிய நூல்களும், போட்டித் தோ்வுகளுக்கான நூல்களும் இடம்பெற்றுள்ளன. வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.