நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே சந்தை அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு: மேயா் தகவல்
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் சந்தை அமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாகா்கோவில் மாநகர பகுதியில் குடிநீா் கட்டண நிா்ணயம் தொடா்பாக கடந்த மாத கூட்டத்தில் தீா்மானம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தீா்மானம் இந்த மாத (மே) கூட்டத்தில் மீண்டும் கொண்டு வரப்பட்டபோது, அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சில உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
நாகா்கோவில் மாநகராட்சியின் 1, 2, 3, 50, 51, 52 ஆகிய வாா்டு பகுதிகளில் குடிநீா் திட்டத்தை செயல்படுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. தற்போது குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகள் நிறைவு பெறும்.
வடசேரி பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில், உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.55 கோடி மதிப்பில் சந்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள சந்தையை மாற்றிவிட்டு பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் சந்தை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனது சொந்த நிதியில், புத்தளம் அருகேயுள்ள கல்லடிவிளையில் முதல்வா் படைப்பகம் அமைக்கப்படஉள்ளது. அங்கு கருணாநிதி சிலையும் அமைக்கப்படும் என்றாா் அவா்.