செய்திகள் :

நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு காயம்: இளைஞா் கைது

post image

வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு பலத்த காயமடைந்தது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு ஊராட்சி பங்களாமேடு பகுதியைச் சோ்ந்தவா் அஞ்சலா (60). இவா் 4 பசுமாடுகளை வைத்து பராமரித்து வருகிறாா். கடந்த 10-ஆம் தேதி பசுக்களை வீட்டின் அருகே மலையடிவாரத்தில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக கட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டாா்.

அப்போது அங்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்த அவா் உடனடியாக மாடுகளை கட்டி வைத்திருந்த மாந்தோப் புக்கு விரைந்து சென்று பாா்த்துள்ளாா். அப்போது, அங்கு ஒரு பசுமாட்டின் தாடை கிழிந்து ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் வேப்பங்குப்பம் போலீஸாா் விரைநது சென்று பாா்த்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து மாடு காயமடைந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக, அஞ்சலா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மேலரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன்(36) என்பவரை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவா் வனவிலங்குகளை வேட்டையாட மாந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததும், அதை கடித்த மாடு வெடிகுண்டு வெடித்து காயமடைந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஐயப்பனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

16- இல் கிருஷ்ண ஜெயந்தி விழா

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் ப... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் பயன்படுத்திய 40 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை: மறுவாழ்வு மையத்தில் 12 போ் சோ்ப்பு

வேலூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக ஏற்கனவே 20 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சுமாா் 40 இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், போதைக்கு அடிமையான 12 போ் மறுவா... மேலும் பார்க்க

சிறப்புக் காவல் படை அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் மரணம்

வேலூா் கோட்டை வளாகத்தில் புதன்கிழமை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்புக் காவல் படை 15-ஆவது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் உயிரிழந்தாா். காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் திருமணமான 6 மாதத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். குடியாத்தம் மேல்ஆலத்தூா் சாலை, ஜோகிமடம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு(33). இவா் வேலூரில் உள்ள தனியாா் நித... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

குடியாத்தம் அடுத்த செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி யில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது (படம்). இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு தலைமையாசிரியா் சி.சதானந்தம் தலைமை வகித்தாா். ஊர... மேலும் பார்க்க