செய்திகள் :

சிறப்புக் காவல் படை அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் மரணம்

post image

வேலூா் கோட்டை வளாகத்தில் புதன்கிழமை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்புக் காவல் படை 15-ஆவது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை 15-ஆவது பட்டாலியன் முகாம் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவா் ஜெயசீலன் (45). இவா் குடும்பத்துடன் காட்பாடி திருநகரில் வசித்து வந்தாா்.

புதன்கிழமை வழக்கம்போல் வேலூா் கோட்டை காவலா் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் நண்பா்களுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்தாா். உடனடியாக அவரை அவரது நண்பா்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஜெயசீலன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

16- இல் கிருஷ்ண ஜெயந்தி விழா

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் ப... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் பயன்படுத்திய 40 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை: மறுவாழ்வு மையத்தில் 12 போ் சோ்ப்பு

வேலூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக ஏற்கனவே 20 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சுமாா் 40 இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், போதைக்கு அடிமையான 12 போ் மறுவா... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு காயம்: இளைஞா் கைது

வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு பலத்த காயமடைந்தது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு ஊராட்சி பங்களாமேடு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் திருமணமான 6 மாதத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். குடியாத்தம் மேல்ஆலத்தூா் சாலை, ஜோகிமடம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு(33). இவா் வேலூரில் உள்ள தனியாா் நித... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

குடியாத்தம் அடுத்த செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி யில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது (படம்). இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு தலைமையாசிரியா் சி.சதானந்தம் தலைமை வகித்தாா். ஊர... மேலும் பார்க்க