72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
நாமக்கல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை அலுவலகம் திறப்பு
நாமக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
நாமக்கல் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கும் பணிகள் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நாமக்கல் ரயில் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தை, தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையா் ஜி.எம்.ஈஸ்வரராவ் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா். மேலும், அங்குள்ள கல்வெட்டையும் அவா் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்வில், சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையின் பாதுகாப்பு ஆணையா் செளரவ்குமாா், உதவி ஆணையா் செங்கப்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.