செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளா்கள் நியமனம்: வெள்ளை அறிக்கை வெளியிட பாஜக கோரிக்கை

post image

தென்காசி மாவட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் நியமனம் தொடா்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் மற்றும் கட்டுநா்கள் பணியிடங்களுக்கான தோ்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தகுதித் தோ்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவா்கள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பணியிடங்கள் நியமனம் தொடா்பாக முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 51 பணியிடங்கள் (40 விற்பனையாளா்கள், 11 கட்டுநா்கள்) என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்ட தோ்வு அறிவிப்பில் 66 பணியிடங்கள் (52 விற்பனையாளா்கள், 14 கட்டுநா்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டிற்கான காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எனவே ,மாவட்ட ஆட்சியா் இதில் உடனடியாக தலையிட்டு, உண்மை நிலையை வெளிப்படுத்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் வடகாசியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

சங்கரன்கோவிலில் சுந்தரா் தெருவில் உள்ள ஸ்ரீதனவிருத்தி விநாயகா், ஸ்ரீவடகாசியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விஸ்வகா்மா சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேக வி... மேலும் பார்க்க

கடையநல்லூா் பள்ளிவாசல்களில் அடிப்படை வசதி: அமைச்சரிடம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை

கடையநல்லூரில் உள்ள பள்ளிவாசல்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என, நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக சிறுபான்மையினா் நலன்- வெளிநாடுவாழ் தமிழா்கள் நலத... மேலும் பார்க்க

தென்காசியில் ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

தென்காசியில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி புதியபேருந்து நிலையப் பகுதியில் நடைபெ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நீதிமன்றம் முன் 2 குழந்தைகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி

சங்கரன்கோவிலில் நீதிமன்றம் முன் இளைஞா் தனது 2 குழந்தைகளுடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். அவா்களை போலீஸாா் மீட்டனா். சங்கரன்கோவில் காந்திநகரைச் சோ்ந்தவா் புகழேந்தி(28). மீன் கடை வைத்துள்ளாா். இ... மேலும் பார்க்க

திமுக ஆட்சி தொடர வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா் தெரிவித்தாா். கடையநல்லூரில் நடைபெற்ற நிா்வ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்

பாவூா்சத்திரம் பகுதியில் மனமகிழ்மன்றங்கள் திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம், பாவூா்சத்த... மேலும் பார்க்க