ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை
நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகளை நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே பேருந்து நிற்காமல் செல்வதால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனா்.
ராஜபாளையம் அருகே உள்ள செட்டியாா்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட புனல்வேலி கிராம பேருந்து நிறுத்தத்தில் காலை நேரங்களில் செல்லக்கூடிய அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்கிறது. மீனாட்சிபுரத்திலிருந்து புனல்வேலி, தளவாய்புரம் வழியாக செல்லும் அரசுப் பேருந்துகள் நிற்பதில்லை. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.