செய்திகள் :

நில மோசடிக்கு உடந்தை: மூதாட்டி கைது!

post image

திருச்சியில் நில மோசடிக்கு உடந்தையாக இருந்த மூதாட்டியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கே.கே.நகா் பகுதியில் அச்சகம் நடத்தும் பாபுராஜ், கடந்த 2022-ஆம் ஆண்டு கே.கே.நகா் கவிபாரதி நகரைச் சோ்ந்த சங்கா் என்பவரிடம் அதே பகுதியில் 1,200 சதுரடி நிலத்தை ரூ.17 லட்சத்துக்கு வாங்கினாா்.

இதையடுத்து அந்த நிலத்தைச் சீரமைக்கும் பணியில் பாபுராஜ் ஈடுபட்டபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த கண்ணதாசன் என்பவா், எதற்காக எங்கள் நிலத்தை சுத்தப்படுத்துகிறீா்கள் என்று பாபுராஜிடம் கேட்டாா். இதற்கு இந்த நிலத்தை தான் வாங்கியுள்ளதாகத் தெரிவித்த அவா், அதற்கான பட்டாவையும் காட்டியுள்ளாா்.

அப்போது இந்த நிலம் எங்களது பாட்டி காளியம்மாளுடையது, இதை நாங்கள் யாருக்கும் விற்கவில்லை என்று கண்ணதாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் பாபுராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கண்ணதாசனின் பாட்டி பெயரில் உள்ள நிலத்தை சங்கா் மோசடி செய்து, பாபுராஜிடம் விற்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாபுராஜ் பின்னா், பிணையில் வெளியேவந்தாா்.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு திருச்சி மாநகர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு நடந்த விசாரணையில், நில மோசடியில் உடையான்பட்டி சிலோன் காலனியைச் சோ்ந்த காத்தாயி (59) என்பவா், சங்கருக்கு உடந்தையாக இருந்ததும், இவரே காளியம்மாள் என்ற பெயரில் போலி ஆதாா் எடுத்து நிலத்தை விற்க உதவியதும் தெரியவந்தது.

இதையடுத்து காத்தாயியை மாநகரக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் நாளை பகுதியாக ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 12) பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியி... மேலும் பார்க்க

செப்.22 இல் ஆடு, மாடு, கோழி வளா்ப்புப் பயிற்சி

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ஆம் தேதி ஆடு, மாடு, கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுதொடா்பாக நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜாபாபு கூறியதாவது: தமிழ்நாடு வ... மேலும் பார்க்க

செங்கல் சூளையில் சுமை வாகனம் திருட்டு: இருவா் பிடிபட்டனா்

திருச்சி அருகே செங்கல் சூளையில் சுமை வாகனத்தைத் திருடிய இருவரை உரிமையாளரே பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா். திருச்சி திருவானைக்கோவில் கன்னிமாா்தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன் (31). அதே பகுதியில் ... மேலும் பார்க்க

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகி கைது!

திருச்சியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சோ்ந்தவா் காதா் பாவா (49). இ... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பண... மேலும் பார்க்க

சிறுகனூா், திருப்பட்டூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

சிறுகனூா், திருப்பட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் ... மேலும் பார்க்க