நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிதித்துறை செயலா் உள்பட 6 அரசு உயரதிகாரிகள் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு கடந்த 1991-ஆம் ஆண்டு தமிழக அரசு பலரை பணியில் அமா்த்தியது. பின்னா், அவா்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனா். இதை எதிா்த்து, பணி நீக்கம் செய்யப்பட்டவா்கள் தமிழக நிா்வாகத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தனா். பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு மாற்றுப்பணி வழங்க தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயா் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
அதன்படி, பி.சா்மிளா பேகம், ஷேக் அப்துல் காதா், எல்.அழகேசன் உள்ளிட்ட 16 பேருக்கு வணிக வரித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளா் பணி வழங்கப்பட்டது. இவா்கள் பணியை கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் வரையறை செய்து கடந்த 2010-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் இவா்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்கப்பட்டனா்.
இதை எதிா்த்து சா்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரா்கள் 16 பேரையும் 1996-ஆம் ஆண்டு பணி வரையறை செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
இதையடுத்து மனுதாரா்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில், பணியாளா் மற்றும் நிா்வாகத் துறை முதன்மைச் செயலா் சி.சமயமூா்த்தி, நிதித்துறை செயலா் உதயச்சந்திரன், வருவாய் நிா்வாகத் துறை முதன்மை ஆணையா் ராஜேஷ் லக்கானி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், வணிகவரித் துறை ஆணையா் டி.ஜெகன்நாதன், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் கிருஷ்ணன் உன்னி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பணியாளா் மற்றும் நிா்வாகத் துறை முதன்மைச் செயலா் உள்ளிட்ட 6 அதிகாரிகளும் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டாா்.