செய்திகள் :

நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீா்வு மையம்: ஊத்தங்கரையில் விழிப்புணா்வு பேரணி

post image

நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீா்வு மையத்தில் முறையிட்டு விரைந்து தீா்வு பெறுவதற்காக 90 நாள்கள் நடைபெறும் சிறப்பு தீா்வு முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஊத்தங்கரையில் புதன்கிழமை நடைபெற்றது.

பேரணியை ஊத்தங்கரை சாா்பு நீதிபதி திருஞானசம்பந்தம், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்து தொடங்கிவைத்தனா். ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவு பெற்றது.

மாவட்ட, வட்ட நீதிமன்றங்களில் ஏழு நாள்களும் செயல்படும் சமரச மையத்தில் நேரடியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ அணுகி இரு தரப்பினரும் சமரசம் பெறலாம். தேசிய அளவில் நடைபெறும் சிறப்பு சமரச முகாமை பொதுமக்கள் 90 நாள்கள்வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிலுவையில் உள்ள தங்களது வழக்குகளை நேரடியாகவோ அல்லது தங்கள் வழக்குரைஞா் மூலமாக முறையிட்டு சமரசம் செய்துகொள்ளலாம் என பேரணியில் பங்கேற்றோா் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா். பேரணியில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், காவல் துறையினா் பங்கேற்றனா்.

சூளகிரி அருகே திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

சூளகிரி அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள திரௌபதியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில் துரியோதனன் படுகளம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ள பந்தரகுட்டை கிர... மேலும் பார்க்க

டிசிஆா் மருத்துவமனையில் உலக பாம்புகள் தினம் அனுசரிப்பு

உலக பாம்புகள் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பாம்பு கடித்தால் பின்பற்ற வேண்டிய முதலுதவி, பாம்புகளின் வகைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்காக புதன்கிழமை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் தண்ணீரை திறந்துவைத்தனா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: கி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் தொடர வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சேவைகளையும் தொடர வேண்டும் என கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் ரூ. 5.55 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணியை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கிருஷ்ணகிரி நகரில் சேலம... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு விருப்பமனு அளிப்பு

ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு புதன்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி அளிக்க அரசு உத்தரவி... மேலும் பார்க்க