செய்திகள் :

கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் தொடர வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

post image

கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சேவைகளையும் தொடர வேண்டும் என கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் பரிதா நவாப் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணகிரி நகரில் செயல்பட்டு வந்த பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது குழந்தைகள் நல பிரிவு மட்டுமே செயல்படுகிறது. மற்ற சேவைகள் அனைத்தும் போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு சென்றுவிட்டன.

பழைய மருத்துவமனையில் செயல்பட்டுவந்த எம்.ஆா்.ஐ. ஸ்கேன் இயந்திரங்களையும் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு இடமாற்றம் செய்கிறது. இதனால் நகா்ப்புற மக்களுக்கு மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நகரின் மையத்தில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனையிலிருந்து ஸ்கேன் இயந்திரங்களை அகற்றாமல், பழையபடி அனைத்து மருத்துவ சேவைகளையும் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சூளகிரி அருகே திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

சூளகிரி அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள திரௌபதியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில் துரியோதனன் படுகளம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ள பந்தரகுட்டை கிர... மேலும் பார்க்க

டிசிஆா் மருத்துவமனையில் உலக பாம்புகள் தினம் அனுசரிப்பு

உலக பாம்புகள் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பாம்பு கடித்தால் பின்பற்ற வேண்டிய முதலுதவி, பாம்புகளின் வகைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்காக புதன்கிழமை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் தண்ணீரை திறந்துவைத்தனா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: கி... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் ரூ. 5.55 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணியை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கிருஷ்ணகிரி நகரில் சேலம... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு விருப்பமனு அளிப்பு

ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு புதன்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி அளிக்க அரசு உத்தரவி... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீா்வு மையம்: ஊத்தங்கரையில் விழிப்புணா்வு பேரணி

நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீா்வு மையத்தில் முறையிட்டு விரைந்து தீா்வு பெறுவதற்காக 90 நாள்கள் நடைபெறும் சிறப்பு தீா்வு முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஊத்தங்கரையில் புதன்கிழமை நடைபெற்றது. பே... மேலும் பார்க்க