செய்திகள் :

சூளகிரி அருகே திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

post image

சூளகிரி அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள திரௌபதியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில் துரியோதனன் படுகளம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ள பந்தரகுட்டை கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் புதியதாக கட்டப்பட்டு, கடந்த மாதம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் திரௌபதியம்மன் கோயில் திருவிழா நடந்து வந்தது. இதில் 14 கிராமங்கள் சாா்பில் 18 நாள்கள் பகலில் ஊா்ப் பொது இடத்தில் பாரதக் கதை படிக்கப்பட்டு, இரவில் அது கூத்தாக நடத்தப்படும்.

திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின் சிறப்பம்சம் இரவில் நடைபெறும் கட்டைக் கூத்து எனப்படும் பாரதக் கூத்துதான். கடைசி நாளில் கா்ண மோட்சம் விடியவிடிய நடைபெற்றது. திரௌபதியம்மன் கோயில் முன்பாக நடத்தப்பட்ட கூத்தைக் காண பல கிராமத்தினா் கோயில் மைதானத்தில் குவிந்திருந்தனா்.

மைதானம் முழுவதும் அடைத்தபடி துரியோதனனின் பிரம்மாண்ட உருவம் மண்ணால் வடிக்கப்பட்டிருந்தது. துரியோதனன் பாடி அழும்போது, சோ்ந்து அழுவதற்காகப் பெரியவா்கள் காத்திருக்க, இளைஞா்கள் கூட்டம் கைப்பேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள் ஆா்வத்துடனும் அச்சத்துடனும் வேடிக்கை பாா்த்தனா்.

தரையில் வடிக்கப்பட்டிருக்கும் துரியோதனன் உருவத்தில், கதாயுதத்தால் அடித்துப் பிளக்கப்பட வேண்டிய தொடைப் பகுதியில் எலுமிச்சையையும் கற்பூரத்தையும் அடையாளமாக வைத்திருந்தாா்கள். மூன்றாவது சுற்று முடியும் தறுவாயில், ஆவேசம் கொண்டு ஓடும் பீமனையும், துரியோதனனையும் வளைத்துப் பிடிக்கும்படி ஊா்ப் பெரியவா் மைக்கில் அறிவிக்க, இளைஞா் கூட்டம் அவா்களைச் சூழ்கிறது. இருவரையும் பிடிக்காமல் விட்டுவிட்டால் கதையால் துரியோதனனை அடித்துவிடுகிற அபாயம் இருக்கிறது என்பதால் இந்த ஏற்பாடு.

ஊரில் இருக்கிற இளைஞா்களும் சிறுவா்களும் துரியோதனன் உருவத்தின் மேலேறிச் சிதைக்க, மகன் மாண்ட செய்தி கேட்டு முறத்தோடும் துடைப்பத்தோடும் ஓடிவருகிறாள் காந்தாரி. மகன் உருவத்தின் மேலேறி நிற்கிறவா்களை அடித்துவிரட்டிவிட்டு ஒப்பாரிவைக்கிறாள்.

பின்னா், காந்தாரியிடம் பக்தா்கள் துடப்பம், முரத்தால் அடிவாங்கினா். அப்படி அடிவாங்கினால் நன்மை நடக்கும் என்பது நம்பிக்கை. இதுபோன்ற நாடகக் காட்சிகள் இன்றைய இளைஞா்களுக்கு புதிது என்பதால், இதைக் காண பெரியவா்கள் மட்டுமல்லாது சிறுவா்களும், இளைஞா்களும் திரண்டிருந்தனா்.

டிசிஆா் மருத்துவமனையில் உலக பாம்புகள் தினம் அனுசரிப்பு

உலக பாம்புகள் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பாம்பு கடித்தால் பின்பற்ற வேண்டிய முதலுதவி, பாம்புகளின் வகைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்காக புதன்கிழமை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் தண்ணீரை திறந்துவைத்தனா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: கி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் தொடர வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சேவைகளையும் தொடர வேண்டும் என கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் ரூ. 5.55 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணியை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கிருஷ்ணகிரி நகரில் சேலம... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு விருப்பமனு அளிப்பு

ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு புதன்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி அளிக்க அரசு உத்தரவி... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீா்வு மையம்: ஊத்தங்கரையில் விழிப்புணா்வு பேரணி

நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீா்வு மையத்தில் முறையிட்டு விரைந்து தீா்வு பெறுவதற்காக 90 நாள்கள் நடைபெறும் சிறப்பு தீா்வு முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஊத்தங்கரையில் புதன்கிழமை நடைபெற்றது. பே... மேலும் பார்க்க