செய்திகள் :

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

post image

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்காக புதன்கிழமை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் தண்ணீரை திறந்துவைத்தனா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. வலதுபுற கால்வாயில் விநாடிக்கு 75 கனஅடி, இடதுபுற கால்வாயில் விநாடிக்கு 75 கனஅடி என மொத்தம் 151 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் பெரியமுத்தூா், சுண்டேகுப்பம், திம்மாபுரம், செளட்டஅள்ளி, காலேவேஅள்ளி, தளிஅள்ளி, மிட்டஅள்ளி, குண்டலப்பட்டி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வர மடம், பாலேகுளி, காவேரிப்பட்டணம், மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி (ஜெகதாப்) பையூா் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கா் நன்செய் நிலங்கள் பயன்பெறும்.

கிருஷ்ணகிரி அணையில் தற்போது 50.95 அடி தண்ணீா் உள்ளது. நீா்வரத்தை கணக்கில்கொண்டு 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. விவசாயிகள், நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் (பயிற்சி) க்ரிதி காம்னா, நீா்வளத் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், வேளாண் துறை இணை இயக்குநா் காளியப்பன், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா் பொன்னிவளவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சூளகிரி அருகே திரௌபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

சூளகிரி அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள திரௌபதியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில் துரியோதனன் படுகளம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ள பந்தரகுட்டை கிர... மேலும் பார்க்க

டிசிஆா் மருத்துவமனையில் உலக பாம்புகள் தினம் அனுசரிப்பு

உலக பாம்புகள் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் பாம்பு கடித்தால் பின்பற்ற வேண்டிய முதலுதவி, பாம்புகளின் வகைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் தொடர வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சேவைகளையும் தொடர வேண்டும் என கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் ரூ. 5.55 கோடியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டுமானப் பணியை ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கிருஷ்ணகிரி நகரில் சேலம... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு விருப்பமனு அளிப்பு

ஒசூா் மாநகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவிக்கு புதன்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி அளிக்க அரசு உத்தரவி... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீா்வு மையம்: ஊத்தங்கரையில் விழிப்புணா்வு பேரணி

நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீா்வு மையத்தில் முறையிட்டு விரைந்து தீா்வு பெறுவதற்காக 90 நாள்கள் நடைபெறும் சிறப்பு தீா்வு முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஊத்தங்கரையில் புதன்கிழமை நடைபெற்றது. பே... மேலும் பார்க்க