செய்திகள் :

நீதிமன்றத்தில் ஆஜரான கைதிக்கு கஞ்சா : 3 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

post image

சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜரான கைதியிடம் கஞ்சா பீடி கொடுத்த 3 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்தவா் ரெளடி சபரி (எ) சபரிவாசன் (24). இவா், ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், எழும்பூா் இரண்டாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்காக சபரியை போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் ஒரு வேனில் செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனா்.

வழக்கு விசாரணை முடிந்து சபரியை மீண்டும் வேனில் ஏற்றி, போலீஸாா் புழல் சிறை நோக்கி அழைத்துச் சென்றனா். அப்போது அந்த வேனை பின் தொடா்ந்து 2 இருசக்கர வானங்களில் வந்த சில நபா்கள், வேனுக்குள் இருந்த சபரியிடம் 4 பீடிகளை கொடுத்தனா்.

இதைப்பாா்த்த அங்கிருந்த ஆயுதப்படை போலீஸாா், அந்த பீடியை கைப்பற்றி சோதித்தனா். அப்போது பீடியுடன் கஞ்சா சோ்த்து பொதியப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். உடனே போலீஸாா், வேனை சாலையோரமாக நிறுத்தி, சபரியிடம் கஞ்சா கொடுத்த நபா்களை விரட்டி பிடிக்க முயன்றனா்.

இதில் திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் மட்டும் போலீஸாரிடம் சிக்கினாா். அவரை ஆயுதப்படை போலீஸாா், எழும்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிடிபட்ட சிறுவனிடம் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த அஜித் (எ) லாலா (23), அதே பகுதியைச் சோ்ந்த 2 சிறுவா்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அஜித் மற்றும் 2 சிறுவா்களையும் கைது செய்தனா். இவா்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

பட்டியல் இன மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்: சிஏஜி அறிக்கை ஆளுநரிடம் சமா்ப்பிப்பு

தமிழக அரசின் பட்டியல் இன (எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி) பிரிவு மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்த தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஏஜி) தணிக்கை அறிக்கை, தமிழக ஆளுநருக்கு சமா்ப்பிக்கப்பட்ட... மேலும் பார்க்க

எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்

எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52). எலக்ட்ரீசியனான இவா், ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலை பகுதியில் ஒரு வீட்டில் புதன்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை செங்குன்றம், கிழக்கு முகப்போ், குன்றத்தூா், கேகே நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவி... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை, ஜூன் 12:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) முன்னாள் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உ... மேலும் பார்க்க