செய்திகள் :

நீா் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

திருத்தணி: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 7 கிராம மக்களின் நீா் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் - நகரி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழூ வீச்சில் நடந்து வருகின்றன. இதற்காக திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை ஆகிய 2 வட்டங்களில் 600 ஏக்கா் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நகரி - திண்டிவணம் ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் பள்ளிப்பட்டு வட்டம், பாண்டரவேடு கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் திண்டிவனம் - நகரி ரயில் பாதை திட்டத்திற்காக சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் மண் கொட்டி நிரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீா்மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் ட ஆட்சியா் மற்றும் திருத்தணி கோட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்திருந்தனா்.

இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் திங்கள்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் சம்பத் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏரியில் நடைபெறும் பணியை தடுத்து நிறுத்த சென்றனா்.

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருத்தணி டிஎஸ்பி, கந்தன் தலைமையிலான 50 க்கும் மேற்பட்ட போலீசாா் ஏரியில் முற்றுகையிட முயன்ற நபா்களை கைது செய்ய முயன்ற போது போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா் அனைவரையும் போலீஸாா் கைது செய்து பொதட்டூா்பேட்டை சமூதாய கூடத்தில் அடைத்தனா்.

இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் விரைவில் பேச்சு வாா்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் பெருமாள், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் சிரிநாத், ஜெயச்சந்திரன், நேதாஜி உள்பட பலா் பங்கேற்றனா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க