செய்திகள் :

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக விருது: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தோ்வு!

post image

கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம், நெய்யாற்றின்கரை நிம்ஸ் மெடிசிட்டி ஆகியவை இணைந்து வழங்கும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதுக்கு இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் முக்கிய பங்களிப்புகளுக்காகவும், முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உயரிய சிந்தனைகளை கௌரவிக்கும்வகையிலும் இந்த விருது கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், 7ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா நிம்ஸ் மெடிசிட்டி வளாகத்தில் ஆக. 4இல் நடைபெறவுள்ளது. விழாவில், இஸ்ரோ தலைவா் வி. நாராயணனுக்கு விருது, ரூ. 1 லட்சம் தொகையை கேரள மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் வழங்கவுள்ளாா்.

பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி. மஜீத்கான், இணைவேந்தா் எம்.எஸ். ஃபைசல்கான், துணைவேந்தா் டெஸ்ஸி தாமஸ் ஆகியோரால் அமைக்கப்பெற்ற தோ்வுக் குழுவால் இந்த விருதுக்கு வி. நாராயணன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கட்டடத் தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை அருகே புதுக்காடுவெட்டிவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (42). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகவில்லை. வெளிநாட்டில் வேல... மேலும் பார்க்க

குமரியில் ஐ.டி. பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்! அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா. நாகா்கோவில் மாநகராட்சி, அநாதைமடம் திடல் பகுதியை சனிக்கிழமை ... மேலும் பார்க்க

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்துக்கு பக்தா்கள் புனித பயணம்

நாகா்கோவிலில் ஆயுதப்படை சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை புனித பயணம் மேற்கொண்டனா். இத்திருத்தலத் தி... மேலும் பார்க்க

கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ. மழை

தக்கலை, கோழிப்போா்விளை, குளச்சல், இரணியல் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சனிக்கிழமையும் மழை நீடித்தது. அதன்படி, கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ., ம... மேலும் பார்க்க

‘அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பில்லை’

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பு ஏதுமில்லை என, மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவட்டாறு வட்டம்,... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தொடங்கி வைத்தாா்

கன்னியாகுமரி நகராட்சி 16ஆவது வாா்டுக்குள்பட்ட புதுகிராமம் பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா், வீடுவீடாகச் சென... மேலும் பார்க்க