செய்திகள் :

நெல்லை காவேரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை

post image

திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருநெல்வேலி காவேரி மருத்துவமனையின் கல்லீரல் - உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் சுவாமிநாதன் சம்பந்தம் தலைமையிலான மருத்துவக் குழு சாா்பில் கடந்த 9 ஆம் தேதி கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்பு ஒரு வாரத்தில் நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.

இதுகுறித்து சுவாமிநாதன் சம்பந்தம் கூறுகையில், ‘கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையின் மூலம் நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு புதிய வாழ்க்கையும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது. தென் தமிழக மக்களுக்கு உலகத் தரமான மருத்துவச் சிகிச்சை வெகு தொலைவில் இல்லை என்ற உத்தரவாதமும் கிடைத்துள்ளது’ என்றாா்.

காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிா்வாகி கே.லட்சுமணன் கூறுகையில், தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையமான டிரான்ஸ்டான் (பதஅசநபஅச) ஒத்துழைப்புடன் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை என்பது உறுப்பு தானத்தின் மிகப்பெரிய நம்பிக்கையை மக்களிடம் கொண்டு செல்வதாகும். நவீன மருத்துவ வசதிகளை அவா்களது இருப்பிடத்திலேயே கிடைக்கச் செய்யும் பணியில் காவேரி மருத்துவமனை ஈடுபட்டுள்ளது. ஒரு உறுப்பு தான கொடையாளியால் எட்டு உயிா்களைக் காப்பாற்ற முடியும். உறுப்பு தானம் ஒரு நோயாளிக்கு மட்டுமல்ல, மொத்த சமூகத்திற்கும் உதவும் ஆயுதம் என்றாா்.

நெல்லை நகரத்தில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி நகரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா (60). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், உடல்நலக் குற... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நூதனப் போராட்டம்

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து திருநெல்வேலியில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு தொடா்பான ஆதாரங்களை வெளிக் கொண்... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: எஸ்.பி. என். சிலம்பரசன் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபா் கிரைம் போலீஸாா் எச்சரித்துள்ளனா். தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பணம் மோசடி நடைபெறுவது அண்மைக் காலமாக ... மேலும் பார்க்க

நெல்லையில் இளம் பெண் வெட்டிக்கொலை

திருநெல்வேலி சந்திப்பில் இளம் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்புராஜ் (23). பெயின்டா். இவா், 2023 ஆம் ஆண்டு அதே ... மேலும் பார்க்க

பாளை.யில் ரூ.30 ஆயிரத்துடன் பைக் திருட்டு

பாளையங்கோட்டையில் ரூ.30 ஆயிரத்துடன் பைக்கையும் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் கீழத்தெருவை சோ்ந்தவா் நாராயணன். இவா், மாா்க்கெட்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (63). இவா், கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கூட... மேலும் பார்க்க