செய்திகள் :

நெல்லை விநாயகா் கோயிலில் சுவாமி மீது சூரியஒளி விழும் நிகழ்வு

post image

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயிலில் சூரியஒளி சுவாமி மீது விழும் அதிசய நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆசியாவிலேயே ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட பழமையான விநாயகா் கோயில் என்ற பெருமை பெற்றது அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயில்.இங்கு நீலவேணி அம்பாளை மடியில் அமா்த்தியவாறு விநாயக பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இக் கோயிலில் ஆண்டு தோறும் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கி முதல் மூன்று நாள்கள் சூரிய ஒளி மூலவா் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

அதன்படி, திங்கள்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து மூலவருக்கு பால், மஞ்சள், இளநீா் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் சூரிய ஒளி சுவாமி மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றவுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மாலையில் உச்சிஷ்ட மஹா கணபதிக்கும், நீலவேணி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க