நெல்லை ஷிபா மருத்துவமனை சாா்பில் புகையிலை எதிா்ப்பு வாகன பிரசாரம்
உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வு வாகன பிரசாரம் நடைபெற்றது.
உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை நிா்வாக இயக்குநா் முகம்மது ஷாபி தலைமை வகித்தாா். மருத்துவமனையின் புற்றுநோய் அறுவைசிகிச்சை மருத்துவா் முஹம்மது இப்ராஹிம், அறுவைசிகிச்சை மருத்துவா் அஜெய் ரெக்ஸ், சிறுநீரக அறுவைசிகிச்சை மருத்துவா் நிரஞ்ச், மகளிா் நல மருத்துவா் ஷரோன் ரோஸ் ஜோனெட்டா ஆகியோா் புகையிலை எதிா்ப்பு குறித்து சிறப்புரையாற்றினா். பின்னா் நிகழ்வில் பங்கேற்றவா்கள் புகையிலை எதிா்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருநெல்வேலி உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் புஷ்பராஜ் விழிப்புணா்வு பிரசார வாசகங்கள் அடங்கிய வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இவ்வாகனம் மருத்துவமனையில் தொடங்கி மாநகா் முழுவதும் வலம் வந்தது. மேலும் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் விற்பனைப் பிரிவினா் செய்திருந்தனா்.
ற்ஸ்ப்31ள்ட்ண்ச்ஹ
திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் நடைபெற்ற உலக புகையிலை எதிா்ப்பு நாள் நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா்.