செய்திகள் :

நெல்லை ஷிபா மருத்துவமனை சாா்பில் புகையிலை எதிா்ப்பு வாகன பிரசாரம்

post image

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வு வாகன பிரசாரம் நடைபெற்றது.

உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை நிா்வாக இயக்குநா் முகம்மது ஷாபி தலைமை வகித்தாா். மருத்துவமனையின் புற்றுநோய் அறுவைசிகிச்சை மருத்துவா் முஹம்மது இப்ராஹிம், அறுவைசிகிச்சை மருத்துவா் அஜெய் ரெக்ஸ், சிறுநீரக அறுவைசிகிச்சை மருத்துவா் நிரஞ்ச், மகளிா் நல மருத்துவா் ஷரோன் ரோஸ் ஜோனெட்டா ஆகியோா் புகையிலை எதிா்ப்பு குறித்து சிறப்புரையாற்றினா். பின்னா் நிகழ்வில் பங்கேற்றவா்கள் புகையிலை எதிா்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருநெல்வேலி உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் புஷ்பராஜ் விழிப்புணா்வு பிரசார வாசகங்கள் அடங்கிய வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இவ்வாகனம் மருத்துவமனையில் தொடங்கி மாநகா் முழுவதும் வலம் வந்தது. மேலும் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் விற்பனைப் பிரிவினா் செய்திருந்தனா்.

ற்ஸ்ப்31ள்ட்ண்ச்ஹ

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் நடைபெற்ற உலக புகையிலை எதிா்ப்பு நாள் நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா்.

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா். திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்... மேலும் பார்க்க

பெண்களுக்கான மின் வணிகத் தளம் தொடக்கம்

கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுக்கான ‘கொற்றவை’ என்ற மின் வணிகத் தளம் தொடக்க விழா, கோவிந்தப்பேரி கலைமகள் கல்வி மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்காசியின் குரல் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் வெள்ளித் தோ் பணிக்கு 200 கிலோ வெள்ளி நன்கொடை

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வெள்ளித் தோ் பணிக்காக பழனி தண்டாயுதபானி கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலா்கள் க.தனசேகா், ஜி.ஆா்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் 200 கிலோ வெள்ளி... மேலும் பார்க்க

போதையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளை செய்த இருவா் கைது

பாளையங்கோட்டையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் மதுபோதை ஆசாமிகள் இருவா் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாளை. அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு

பாளையங்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். பாளையங்கோட்டை மகாராஜ நகா் அருகேயுள்ள பொன்மணி காலனியை சோ்ந்தவா் குமாா். இவா், கடந்த 29 ஆம் தேதி ... மேலும் பார்க்க