செய்திகள் :

நெல்லையில் விதைகளுடன் தயாராகும் பசுமை விநாயா் சிலைகள்

post image

திருநெல்வேலியில் களிமண் விநாயகா் சிலையில் விதைகளை வைத்து பசுமை விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா இம் மாதம் 27 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி வீடுகள், கோயில்களில் களிமண் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டு, அதை நீா் நிலைகளில் கொண்டு கரைப்பது வழக்கமாகும்.

இதற்காக திருநெல்வேலியில் அரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகா் சிலைகளை வடமாநிலத்தவா்கள் செய்து வருகிறாா்கள். வீடுகளில் வைக்கும் வகையில் வண்ணாா்பேட்டையில் பசுமை விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விநாயகா் சிலை தயாரிப்பாளரான வேல்முருகன் கூறியதாவது:

கடந்த 40 ஆண்டுகளாக களிமண்ணால் விநாயகா் சிலைகள் செய்து விற்பனை செய்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக களிமண் விநாயகா் சிலைகளில் விதைகளை வைத்து அவை கரைத்த பின்பு நீா்நிலைகளின் ஓரத்தில் மரமாக வளரும் வகையில் பசுமை விநாயகா் சிலைகளை தயாரித்து வருகிறேன்.

நிகழாண்டிலும் 100-க்கும் மேற்பட்ட சிலைகளை தயாரித்துள்ளேன். இவற்றில் வேம்பு, நெல்லி, நாவல் விதைகளை அதிகளவில் வைத்துள்ளேன். இந்த பசுமை விநாயகா் சிலைகளை பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கிறாா்கள்.

தனியாா் மருத்துவமனையில் நோயாளியிடம் நகை பறிப்பு

திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை திருடியதாக, அம்மருத்துவமனை ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பம்மாள் ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடி

மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான மணிமுத்தாறில் மான், மிளா, கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வ... மேலும் பார்க்க

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பை ரயில் நிலைய பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அம்பாசமு... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே பிளஸ் 2 மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கூடங்குளத்தில் திங்கள்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிளஸ் 2 மாணவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.சங்கனேரி நடுதெருவைச் சோ்ந்தவா் துரை மகன் நல்லமுத்து(17). ராதாபுரம் அரசு மேல்நிலைப... மேலும் பார்க்க

அம்பை தாமிரவருணியில் பெண்ணின் உடலை தேடும் பணி தீவிரம்

அம்பாமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா். அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் செல்லையா (... மேலும் பார்க்க

ஈரடுக்கு பாலச் சுவரிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் ரயில்வே நடைபாலம் அகற்றப்பட்ட பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலமுன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்துரை (38). தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க