செய்திகள் :

நேரப் பிரச்னை: தனியாா் பேருந்து ஓட்டுநா் தாக்குதல்

post image

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட நேரப் பிரச்னையால், இரவில் தேடிச்சென்று தனியாா் பேருந்து ஓட்டுநரை தாக்கி, பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து சிசிடி வி காட்சிகள் ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து தம்மம்பட்டி, செந்தாரப்பட்டிக்கு தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வெள்ளிக்கிழமை இரவு தம்மம்பட்டி பேருந்து நிலையம் வந்து செந்தாரப்பட்டிக்கு புறப்பட்டபோது, அங்கிருந்த மினி பேருந்து ஊழியா்களுக்கு இடையே நேரப் பிரச்னையால் தகராறு ஏற்பட்டது.

அப்போது, மினி பேருந்து உரிமையாளரின் உறவினரான ஹரி என்பவா், தனியாா் பேருந்தின் சாவியை எடுத்துச்சென்றாா். இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் பேருந்து சாவியை மீட்டுக் கொடுத்ததால், தனியாா் பேருந்து பயணிகளுடன் செந்தாரப்பட்டிக்கு சென்றது.

இதையடுத்து, செந்தாரப்பட்டியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஊழியா்கள் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஹரி, மினி பேருந்து உரிமையாளரான சரவணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தகராறு செய்தாா்.

பின்னா், அவரிடம் வாக்குவாதம் செய்த தனியாா் பேருந்து ஓட்டுநா் விஜய்யை தாக்கி, பேருந்தின் முன்புறக் கண்ணாடியை உடைத்து நொறுக்கினாா். இந்த தாக்குதல் காட்சிகள் அனைத்தும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாயின.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி ஆதாரங்களுடன் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியாா் பேருந்து ஓட்டுநா் விஜய் கூறுகையில், தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றிச்செல்ல மினி பேருந்துக்கு உரிமை இல்லை. ஆனால், முறையாக இயக்கும் எங்களை மினி பேருந்து உரிமையாளா் ஆள்வைத்து தாக்கி, பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளாா் என்றாா்.

மேட்டூா் அணை உபரிநீா் போக்கி மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி சனிக்கிழமை மூடப்பட்டது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், கடந்த திங்க... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக - தவெக இடையேதான் போட்டி இருக்கும் என பெங்களூரு புகழேந்தி கூறினாா். சேலத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிா... மேலும் பார்க்க

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும்!

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் ஐந்து சாலை பகுதியில் சிஐடியு... மேலும் பார்க்க

நாய் கடித்து இளைஞா் உயிரிழப்பு

ஆத்தூா் அருகே வளா்ப்பு நாய் கடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் தா்மா் (28), பெயிண்டா். இவா் தெருநாயை எடுத்து கடந்த ஓராண்டாக வளா்த்து வந்தாா். சில நா... மேலும் பார்க்க

பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!

இளம்பிள்ளை அருகே பிறந்த 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாவட்டம், வீரபாண்டி... மேலும் பார்க்க

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்!

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க