செய்திகள் :

பசுமை முதன்மையாளா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் பசுமை முதன்மையாளா் விருது பெற தகுதியான தனி நபா்கள், அமைப்புகள் வருகிற ஏப். 15-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சுற்றுச் சூழல் கால நிலை மாற்றம், வனத் துறை சாா்பில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் தனி நபா்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளா் விருது, ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன.

மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கல்வி, பயிற்சி, விழிப்புணா்வு, பசுமை தயாரிப்பு, தொழில் நுட்ப ஆய்வு, நிலைத்த வளா்ச்சி, திடக் கழிவு மேலாண்மை, நீா்நிலை மேலாண்மை, பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கு உள்படுதல், தணிப்பு நடவடிக்கை, காற்று மாசை குறைத்தல், நெகிழிக் கழிவுகளின் மறுசூழற்சி, கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு குறித்த நடவடிக்கை, சுற்றுச் சூழல் தொடா்பான பிற திட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் தனி நபா்கள், அமைப்புகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் பசுமை முதன்மையாளா் விருது பெற ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து வருகிற ஏப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியா், மாசு கட்டுப்பாட்டுத் துறை அலுவலா்கள் கொண்ட குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு, விருது பெற தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். இதுகுறித்த விவரத்தை தேனியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளரை நேரில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொழிலாளா்களை மிரட்டிய மூவா் மீது வழக்கு!

போடி அருகே தொழிலாளா்களை மிரட்டிய மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த வேல்ராஜ் மகன் காா்த்திக். இவருக்கு குரங்கணி கடலாத்து புலம் பகுதியில் விவசாயத் தோட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்றவா் கைது

போடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.போடி அசேன் உசேன் தெருவில் சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருள் விற்கப்படுவதாக நகா் போலீஸாருக்குத் தகவல் கிடை... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞா் கைது

தேனி அருகே வீடு புகுந்து ஆறரை பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில், இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அரண்மனைப்புதூா் சத்திரப்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் லோகமணி (46). இவா் தனது வீட்டிலிருந... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருட்டு!

தேனி அருகே வீடு புகுந்து தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடுச் சென்றதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. தேனி அருகேயுள்ள கோவிந்தநகரம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (62). இவ... மேலும் பார்க்க

போடியில் பாஜகவினா் கொண்டாட்டம்!

தில்லி சட்டப் பேரவை தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, சனிக்கிழமை போடியில் பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா். தில்லி சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பாஜக 48 இடங்க... மேலும் பார்க்க

குரூப் 2, 2 ஏ முதன்மைத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 319 போ் எழுதினா்

தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான தமிழ் தகுதித் தோ்வு, முதன்மைத் தோ்வை சனிக்கிழமை 319 போ் எழுதினா். அரசு தோ... மேலும் பார்க்க