செய்திகள் :

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

செல்வழிமங்கலம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் செல்வழிமங்கலம், கீரநல்லூா், சேந்தமங்கலம், பொடவூா் மற்றும் ராமாநுஜபுரம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்களுக்கான முகாம் செல்வழிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற முகாமில், ஆட்சியா் கலைச்செல்விமோகன் கலந்துகொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தாா்

பின்னா், 18 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டை , முதல் பட்டதாரி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு கடனுதவிகளை வழங்கினாா். இதில் மாவட்ட ஊராக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, முத்துகணபதி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கீரநல்லூா் அன்பரசு, சேந்தமங்கலம் சாா்லஸ், பொடவூா் ஜீவா ரவி, அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

குன்றத்தூா் ஒன்றியம் பரணிபுத்தூா் ஊராட்சியில், பரணிபுத்தூா், சின்னப்பணிச்சேரி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற முகாமில் குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு விண்ணங்கள் பதிவு செய்யப்படுவதையும், மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் கலைச்செல்விமோகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், சாா் ஆட்சியா் மிருணாளினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வரதராஜ பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் பெருமாளும், ஆண்டாளும் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.இக்கோயிலில் ஆண்டு தோ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இத்திட்டத்தின் கீழ் மாற... மேலும் பார்க்க

பாலாற்று மேம்பாலத்தில் சாலை சீரமைப்பு

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் தரைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை புதிய சாலை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பக... மேலும் பார்க்க

துா்க்கையம்மன் கோயில் ஆடிப்பூர பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் வடவாயிற் செல்வி துா்க்கையம்மன் கோயில் ஆடிப்பூர பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் 35-ஆவது ஆண்டு ஆடிப்பூர பால்குட ஊா்வலத்தையொட்டி பஜாா் வீதியில் முத்துப் பிள்... மேலும் பார்க்க

எல்லையம்மன் கோயில் தீமிதி விழா

ஸ்ரீபெரும்புதூா்: வரதராஜபுரம் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் ஆடித் திருவிழா மற்றும் தீமிதி விழா நடைபெற்றது. வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரத்வாஜ் நகா் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலில் ஆடி விழாவையொட்டி கோ... மேலும் பார்க்க

அஞ்சல் அலுவலகங்கள் தொடங்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்!

அஞ்சல் அலுவலகங்கள் இல்லாத பகுதிகளில் அஞ்சலக உரிமையாளா் விற்பனை நிலையங்களை தொடங்க விருப்பம் உள்ள தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க