செய்திகள் :

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி. சிநேகா திங்கள்கிழமை வழங்கினாா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் சிநேகா மொத்தம் 417 கோரிக்கை மனுக்களைப் பெற்று, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், மனுக்களை பரிசீலித்து துரித நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் வாரியத்தில் பதிவு பெற்ற விபத்தில் மரணமடைந்த அமைப்பு சாரா ஓட்டுநரின் மனைவி ஷீலா என்பவருக்கு விபத்து மரண உதவித் தொகை ரூ.2.05 லட்சம் ஆணையினை ஆட்சியா் வழங்கினாா். மேலும், வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநா்கள்இரண்டு பேருக்கு தலா ரூ.1 லட்சத்துடன் கூடிய ஆட்டோ ரிக்ஷாவினை வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 7 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, பிரெய்லி கைகடிகாரம், மூன்று சக்கர மிதிவண்டி உள்ளிட்ட ரூ.1.42 லட்சம் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், மாவட்ட வழங்கல்அலுவலா் வெங்கடாசலம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இராபிறையாா்உற்சவத்தில் அம்மன் வீதி புறப்பாடு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபிறையாா் உற்சவ விழாவில் வீதி புறப்பாடு மேளதாளங்கள்முழங்க, வான வேடிக்கையுடன் அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது. செங்கல்பட்டு பெரிய நத்தம் சேப்பாட்... மேலும் பார்க்க

திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மனுக்கு முக்கண் திறப்பு விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மனுக்கு முக்கண்திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு, முக்கண் திறப்பு விழா திங்க... மேலும் பார்க்க

இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள்: ஆட்சியர் மரியாதை

திவான் பகதூா் திராவிடமணி, இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் தி.சினேகா. இதில் கோட்டாட்சியா் ரம்யா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்-செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூா், மகாலட்சுமி நகா், மெய்யூா், திருவானைக்கோவில், புலிபாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம். மேலும் பார்க்க

லத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செய்யூா் வட்டம், லத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி ப்பணிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். உழவா் நலத்துறையின் சாா்பில், ஊட்டசத்து வேளாண்மை இயக்கத்தை முதல்... மேலும் பார்க்க

அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தாம்பரம் , ஜூலை 3: தாம்பரம் திருநீா்மலை அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குத்தகை விவசாய நிலத்தில் தனியாருக்கு ஆதரவாக சாலை அமைக்க உதவிய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து பல்வேறு க... மேலும் பார்க்க