செய்திகள் :

பல்லடம் அருகே தனியாா் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

post image

பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் நிற்காமல் சென்ற தனியாா் பேருந்தை அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடுபுரத்தைச் சோ்ந்த ஒரு மாணவா் கோவையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா் கோவையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூா் செல்லும் தனியாா் பேருந்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏறியுள்ளாா்.

அப்போது குப்புசாமிநாயுடுபுரத்தில் பேருந்து நிற்காது என்று பேருந்து நடத்துநா் கூறி பல்லடத்துக்கான பேருந்து கட்டணத்தை வசூலித்து டிக்கெட் கொடுத்துள்ளாா். இது குறித்து காங்கிரஸ் கட்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் புண்ணியமூா்த்தி மற்றும் உறவினா்கள், பொதுமக்களுக்கு அவா் கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, அந்த தனியாா் பேருந்து குப்புசாமிநாயுடுபுரம் வந்தபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அந்தப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தனியாா் பேருந்து நிா்வாகம் வருத்தம் தெரிவித்ததோடு, இனிமேல் பேருந்து நின்று செல்லும் என உறுதி அளித்து கடிதம் அளித்தனா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனா்.

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட பீா்க்கங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ரூ.10 விலை உயா்ந்தது. இந்த வாரம் சில்லறை விற்பனையில்... மேலும் பார்க்க

காங்கயத்தில் குற்றங்களைத் தடுக்க வீடுவீடாகச் சென்று போலீஸாா் விழிப்புணா்வு

குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, காங்கயம் போலீஸாா் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காங்கயம் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்துப்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 4 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 4 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை... மேலும் பார்க்க

திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

பிரதமா் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் குமரன் நினைவகம் முன்பாக கருப... மேலும் பார்க்க

நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு

திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு வரும் மே 4-... மேலும் பார்க்க

சாலையில் வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு

திருப்பூா் நெருப்பெரிச்சலில் சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீட்கேடு ஏற்பட்டுள்ளது. திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 4-ஆவது வாா்டு பூலுவப்பட்டி, வாவிபாளையம் பிர... மேலும் பார்க்க