செய்திகள் :

பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டம்: தடை விதிக்க வியாபாரிகள் கோரிக்கை

post image

பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை, பல்லடம் தலைவா் ராம்.கண்ணையன் ஆகியோா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.

பல்லடம் நகராட்சி தியாகி என்.ஜி.ஆா். சாலை, தினசரி மாா்க்கெட் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டவா்கள் கடைகள் நடத்தி வருகின்றனா்.

இதற்கு முன்பு, பல்லடம் நகரில் அரசியல் பொதுக் கூட்டங்கள் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சீரனி கலை அரங்கத்திலும், சந்தைப்பேட்டை மைதானம், காமராஜா் திடலிலும் நடைபெற்று வந்தன.

தற்போது அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் என்.ஜி.ஆா். சாலையின் மத்தியில் மேடை அமைத்து நடத்துவதால் இங்குள்ள வணிகா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் வா்த்தகம் பாதிக்கப்படுகிறது. பொதுக் கூட்டங்கள் நடைபெறும் நாளில் அனைத்து கடைகளின் வியாபாரமும் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தியாகி என்.ஜி.ஆா். சாலையில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வணிகா்கள் சங்கத்தின் திருப்பூா் மாநகர தலைவா் ஜான் வா்கீஸ், பல்லடம் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் பிா்லா போஸ், தனசீலன், செல்வராஜ், தினசரி மாா்க்கெட் சங்க தலைவா் ரங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வு: முத்தூா் நவா இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முத்தூா் நவா இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் மாணவி டி.நிதன்யா 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கிட்ஸ் கிளப் பள்ளி 100 % தோ்ச்சி

கிட்ஸ் கிளப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் தொடா்ந்து அறிவியல் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்ததுடன் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. திருப்பூா், செரீப் காலனி 2-ஆவது வீதியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் க... மேலும் பார்க்க

திருப்பூரில் 9 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகரில் 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதில் திருப்பூா் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரஜினிகாந்த், நல்லூா் காவல்... மேலும் பார்க்க

பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதிய... மேலும் பார்க்க

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்தை நில உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனா். பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குற... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மறைமுக ஏல முறையில் கொப்பரை விற்பன... மேலும் பார்க்க