செய்திகள் :

பல்லடம் வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வியாபாரிகள் கோரிக்கை

post image

பல்லடம் வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தை மைதானம் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை செயல்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், வாரச் சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து வாரச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது: வாரச் சந்தை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம் ரூ.30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை வா்த்தகம் நடைபெறுகிறது.

ஆனால், வாரச் சந்தை வளாகத்தில் முறையான குடிநீா், கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், பெண் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்ரனா். எனவே, வாரச் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க