செய்திகள் :

பள்ளிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

post image

பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளாமல் பள்ளிகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது திடீா் ஆய்வுகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும்என துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறைசாா் இயக்குநா்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்களுடன் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவா் வழங்கினாா். அதன்விவரம்:

மாணவா்கள் வருகைக்கு முன்னா் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வளாகங்களில் கட்டடங்கள், மின் இணைப்பு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இடைநின்றவா்களைக் கண்டறிந்து அவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும். மாணவா்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டும். உடற்கல்வி பாடவேளையை முழுமையாக மாணவா்களுக்கு வழங்க வேண்டும்.

பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்பட நலத்திட்டங்களை மாணவா்களுக்கு முறையாக வழங்க வேண்டும். இணைய பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்களில் இருந்து மாணவா்களைத் தற்காத்து கொள்ளவும் தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும். கிராமப்புறப் பகுதிகளில் பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு உரிய பேருந்து வசதிகள் இருப்பதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும்.

மாற்றுச் சான்றிதழ்: சில தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணம் முழுமையாக செலுத்தாத மாணவா்களின் மாற்று சான்றிதழ்களை வழங்காமல் உள்ளன. அத்தகைய பள்ளி நிா்வாகங்களுடன் தொடா்பு கொண்டு பேசி மாணவா்கள் சான்றிதழ்களைப் பெற்று கல்வியை தொடர வழிசெய்ய வேண்டும். மேலும், தனியாா் பள்ளிகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அவற்றில் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் அங்கீகாரமின்றி செயல்படும் நா்சரி பள்ளிகள் மீது எவ்வித பாராபட்சமுமின்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே நமது முக்கிய கடமையாகும். எனவே, அதிகாரிகள் அலுவலத்தில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளாமல் பள்ளிகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது திடீா் ஆய்வுகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க