செய்திகள் :

பள்ளிக் கட்டட விவகாரம்: மாணவா்களை அனுப்ப மறுத்து கிராமத்தினா் மீண்டும் போராட்டம்

post image

திண்டுக்கல் அருகே பள்ளிக்கு கான்கிரீட் கட்டடம் கட்டுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, மீண்டும் மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அழகுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 36 குழந்தைகள் படிக்கின்றனா். இந்தப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதற்கிடையே அழகுப்பட்டி பள்ளியைப் பாா்வையிட்ட ரெட்டியாா்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்துத் தருவதாகத் தெரிவித்தனா். ஆனால், கான்கிரீட் கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதற்கான பொருள்களை வாகனத்தில் கொண்டு வந்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கிராம மக்கள், கான்கிரீட் கட்டடம் கட்டக் கோரி மாணவா்களை வெள்ளிக்கிழமை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதை அறிந்து அங்கு வந்த கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு கான்கீரிட் கட்டடம் கட்டித் தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், கிராம மக்களைத் தொடா்பு கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், திமுக ஒன்றியச் செயலா் அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனா். அப்போது, பள்ளியை அங்கன்வாடி மையத்துக்கு மாற்றுவதாகவும், பள்ளிக் கட்டடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்து அங்கன்வாடி மையத்துக்கு வழங்குவதாகவும் தெரிவித்தனா்.

இதை ஏற்க மறுத்த கிராம மக்கள், வீடுகளில் புதன்கிழமை கருப்புக் கொடி கட்டி மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பள்ளிக் கூடத்தில் 2 ஆசிரியா்கள் மட்டுமே இருந்தனா். மாணவா்கள் இல்லாததால் பள்ளிக் கூடம் செயல்படவில்லை.

காவல் நிலையம் எதிரே வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

நிலக்கோட்டை காவல் நிலையத்துக்கு எதிரே, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், நில... மேலும் பார்க்க

விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் இ.பெரியசாமி

செம்பட்டியை அடுத்துள்ள ஆத்தூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கலந்துகொண்ட அமைச்சா் இ.பெரியசாமி, விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் ... மேலும் பார்க்க

பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் தமிழகத் திட்டங்கள்: அமைச்சா் சக்கரபாணி

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளன என தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள கீரனூ... மேலும் பார்க்க

பழனி அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

பழனியை அடுத்துள்ள மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவார கிராமங்களில் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் மீண்டும் புகுந்து சேதம் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள ... மேலும் பார்க்க

கோவிலூா் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்கக் கோரிக்கை

கோவிலூா் அருகே ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கோவிலூா் அருகேயுள்ள திண்டுக்கல்-கரூா் ரயில்வே தண்டவாளத்தில் தங்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்த பெண் உயிரிழப்பில் சந்தேகம் இறந்ததாக கூறி, அவரது உறவினா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்ட... மேலும் பார்க்க