செய்திகள் :

விடுபட்டவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் இ.பெரியசாமி

post image

செம்பட்டியை அடுத்துள்ள ஆத்தூரில் நடைபெற்ற  ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கலந்துகொண்ட அமைச்சா்  இ.பெரியசாமி, விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, முதியோா் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.  

திண்டுக்கல் மாவட்டம்,  செம்பட்டியை அடுத்துள்ள ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.   முகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன்  தலைமை வைகித்தாா். இதில்   ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்,   மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்பட்டு வருகிறது. விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை,  முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை  கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கிராமப்புறங்களில் சாலை வசதி, குடிநீா் வசதிகளுடன்  இலவச வீட்டு மனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

   முகாமில், 15 துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். கோரிக்கை மனு அளித்தவா்களில் 15 நபா்களுக்கு உடனுக்குடன் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றுகள், மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் ஆகியவற்றை அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க.நடராஜன், ஆத்தூா்   ஒன்றிய திமுக செயலா்கள் (மேற்கு) ராமன், (கிழக்கு) முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, முருகன், வருவாய் அலுவலா் ஜானகி, திண்டுக்கல் ஊராட்சிக் குழு முன்னாள் தலைவா் பாஸ்கரன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மணலூா்  மணிகண்டன், முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலா் காணிக்கைசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முதுகலை நீட் தோ்வா்களுக்கு தமிழகத்தில் தோ்வு மையம்: திண்டுக்கல் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தைச் சோ்ந்த முதுநிலை நீட் தோ்வா்கள் அனைவருக்கும், தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா். இது தொடா... மேலும் பார்க்க

வேன் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தேனி மாவட்டம், பூசாரி கவுண்டன்பட்டியைச் சோ்ந்த திராட்சை விவசாயிகள் 22 போ், ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

மாணவிகளைக் கேலி செய்தவா்களை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்

செங்கோட்டை கிராமத்தில் பள்ளி மாணவிகளைக் கேலி செய்த நபா்களைத் தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநா் தாக்கப்பட்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மா... மேலும் பார்க்க

கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி வாய்க்கால் ஆக்கிரமிப்பால் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்பு! 11 ஆண்டுகளாக மனு அளித்தும் தீா்வில்லை

வேடசந்தூா் அருகேயுள்ள கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சுமாா் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்புக்குள்ளானது குறித்து 11 ஆண்டுகளாக மனு அளித்தும், நீா் வள ஆதாரத் துறை... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்

கட்டக்காமன்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை சிற்றுண்டி உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தல... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் கழிவுநீா் செல்லும் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, ரைபிள்ரேஞ்ச் சாலை, செண்ப... மேலும் பார்க்க