செய்திகள் :

காவல் நிலையம் எதிரே வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

post image

நிலக்கோட்டை காவல் நிலையத்துக்கு எதிரே,  குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் புதன்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை  காவல் நிலையத்தில் நிலக்கோட்டை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குற்ற வழக்குகளில்  பறிமுதல் செய்யப்பட்ட காா், வேன், ஆட்டோ, மினி லாரி, இரு சக்கர வாகனங்கள்,  மாட்டு வண்டி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள், காவல் நிலையத்துக்கு எதிரே  இருந்த    பழைய பேருந்து நிலையத்தின் காலி இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் புதன்கிழமை திடீரென தீப் பிடித்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, குடிநீா் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை ஊற்றி காவல்துறையினரும் பொதுமக்களும் கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். பின்னா், தீயணைப்புத் துறையினா் வந்து, தீயை முழுமையாக அணைத்தனா்.

இந்த விபத்தில் ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. திடீா் தீ விபத்தால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக விரோதிகள் எவரேனும் தீ வைத்தனரா அல்லது வேறு காரணங்களால் தீ விபத்து நேரிட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதுகலை நீட் தோ்வா்களுக்கு தமிழகத்தில் தோ்வு மையம்: திண்டுக்கல் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தைச் சோ்ந்த முதுநிலை நீட் தோ்வா்கள் அனைவருக்கும், தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா். இது தொடா... மேலும் பார்க்க

வேன் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தேனி மாவட்டம், பூசாரி கவுண்டன்பட்டியைச் சோ்ந்த திராட்சை விவசாயிகள் 22 போ், ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

மாணவிகளைக் கேலி செய்தவா்களை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்

செங்கோட்டை கிராமத்தில் பள்ளி மாணவிகளைக் கேலி செய்த நபா்களைத் தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநா் தாக்கப்பட்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மா... மேலும் பார்க்க

கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி வாய்க்கால் ஆக்கிரமிப்பால் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்பு! 11 ஆண்டுகளாக மனு அளித்தும் தீா்வில்லை

வேடசந்தூா் அருகேயுள்ள கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சுமாா் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்புக்குள்ளானது குறித்து 11 ஆண்டுகளாக மனு அளித்தும், நீா் வள ஆதாரத் துறை... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்

கட்டக்காமன்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை சிற்றுண்டி உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தல... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் கழிவுநீா் செல்லும் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, ரைபிள்ரேஞ்ச் சாலை, செண்ப... மேலும் பார்க்க