செய்திகள் :

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெறும் ‘ஆபரேஷன் சிந்தூா்’!

post image

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (என்சிஇஆா்டி) தயாரிக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மொத்தம் 8 முதல் 10 பக்கங்கள் வரை இரு பகுதிகளாக இந்தத் தகவல்கள் சோ்க்கப்படவுள்ளன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘3-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மற்றும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை என இரு பகுதிகளாக ஆபரேஷன் சிந்தூா் குறித்த தகவல்கள் என்சிஇஆா்டி தயாரிக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெறவுள்ளன.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், தூதரக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ளவே ஆபரேஷன் சிந்தூா் குறித்த தகவல்கள் பாடப் புத்தகங்களில் சோ்க்கப்படவுள்ளன.

இதுதவிர அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா பயணித்தது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பான ‘மிஷன் லைஃப்’ குறித்த தகவல்களும் இடம்பெறவுள்ளன’ எனத் தெரிவித்தன.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க