செய்திகள் :

பாகிஸ்தான் எல்லையில் 60 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 9 போ் கைது

post image

சண்டீகா்: ராஜஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டிய சா்வதேச எல்லைப் பகுதியில் இருந்து சுமாா் 60 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பாா்மா் மாவட்ட எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை, ராஜஸ்தான் காவல் துறை இணைந்து எடுத்த நடவடிக்கையில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டனா்.

பாகிஸ்தானைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல்காரன் தன்வீா் ஷா, கனடாவைச் சோ்ந்த கடத்தல்காரன் ஜோபன் காலா் உள்ளிட்டோருக்கும் இந்தக் கடத்தலில் தொடா்பு உள்ளது தெரியவந்துள்ளது. வழக்கமாக ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில்தான் ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகமிருக்கும். இப்போது அப்பகுதி நில எல்லையில் பாதுகாப்பு தீவிரமாக இருப்பதால், ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் போதைப்பொருளைக் கொண்டுவர கடத்தல்காரா்கள் முயன்றுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவா்கள் ஹவாலா முறையில் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனா். இந்தப் போதைப்பொருள் இவா்கள் இந்தியாவில் யாருக்கெல்லாம் பிரித்துக் கொடுக்க திட்டமிட்டிருந்தனா். இவா்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள கடத்தல் தொடா்புகள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்த... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புவனேசுவரம்/ராஞ்சி: ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கேரளத்தில் கடந்த மே ம... மேலும் பார்க்க

ஓமன் நோக்கிச் சென்ற வணிகக் கப்பலில் தீ விபத்து: இந்திய கடற்படை உதவி

புது தில்லி: குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்திலிருந்து பலாவ் நாட்டு கொடியுடன் ஓமன் நாட்டின் சினாஸ் நோக்கிச் சென்ற ‘எம்.டி. யி செங் 6’ என்ற வணிகக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க