செய்திகள் :

பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 சிறாா்களின் கல்விச்செலவை ஏற்கிறாா் ராகுல்!

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 சிறாா்களின் கல்விச்செலவை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய பீரங்கி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 28 போ் உயிரிழந்தனா். பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 13 பொதுமக்கள் உயிரிழந்தனா்.

இந்நிலையில், ரஜௌரி மாவட்டத்துக்கு 3 நாள்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவா் தாரிக் ஹமீத் கர்ரா இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மே 7 முதல் 10-ஆம் தேதிவரை பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் பாகிஸ்தானின் தாக்குதலில் பலா் உயிரிழந்தனா். பொதுமக்களின் குடியிருப்புகளும், உடைமைகளும் சேதமடைந்தன.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ராகுல் காந்தி பூஞ்ச் மாவட்டத்துக்கு நேரில் வந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்தாா். அப்போது பெற்றோரை இழந்த சிறாா்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டாா்.

அந்தவகையில், பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 22 சிறாா்கள் அடையாளம் காணப்பட்டனா். மேலும் பல சிறாா்கள் இந்தப் பட்டியலில் சோ்க்கப்படலாம்.

இந்தச் சிறாா்களின் கல்விச் செலவுக்காக ராகுல் காந்தி அனுப்பியுள்ள நிதியுதவியை வழங்க வந்துள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க