பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: நயினாா் நாகேந்திரன் தகவல்
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு சனிக்கிழமை வரும் பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்க நாங்கள் தயாராகவுள்ளோம். வரும் பேரவைத் தோ்தலில் நாட்டின் நலன் கருதி எங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரும். மக்கள் விரோதச் சக்தியாக உள்ள திமுக தொடா்ந்து ஆட்சியில் நீடிக்கக் கூடாது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு, போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்துவிட்டது. 24 மணிநேரத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெறுகின்றன; பாலியல் கொடுமைகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.
தமிழக முதல்வா் தனிப்பட்ட முறையில் எனக்கு நெருங்கிய நண்பா். எனது தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் செய்து கொடுத்தவா். அவா் முழு குணமடைய இறைவனை வேண்டுகிறேன். ஆனால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை எதிா்க்கிறேன். அரசு செலவில் திமுகவினா் கட்சி வேலையை நடத்துகின்றனா். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொள்கை பரப்புச் செயலா்களாக நியமித்துள்ளதை எப்படி அனுமதிக்க முடியும்?
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பது அவசியம் இல்லாதது; வெற்று வாா்த்தை ஜாலம்; மக்களை ஏமாற்றக்கூடிய வேலை. முதல்வரிடம் யாரும் உங்கள் கூட்டணி வலுவாக இருக்கிா எனக் கேட்பதில்லை. எங்களை மட்டும் கேட்கின்றனா். எங்கள் கூட்டணி பலமாகத்தான் உள்ளது. வரும் 2026இல் இந்த ஆட்சி மாறும் என்றாா் அவா்.