முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
பாடாலூா் பகுதிகளில் மே 27-ல் மின் நிறுத்தம்
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பாடாலூா், திருவிளக்குறிச்சி, தெரணி, தெரணி பாளையம், இரூா், ஆலத்தூா் கேட், கூத்தூா், சீதேவிமங்கலம், காரை, புதுக்குறிச்சி, வரகுபாடி, அயிலூா் குடிகாடு, சிறுகன்பூா், தெற்கு மாதவி, சாத்தனூா், சாத்தனூா் குடிகாடு, கொளக்காந்தம், அயினாபுரம், அணைப்பாடி ஆகிய கிராமியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிரறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.